மயிலாப்பூரில் துணிகரம் தொழிலதிபர் வீட்டில் 52 சவரன் கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: மயிலாப்பூர் பஜார் தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல் (34). தொழிலதிபரான இவர், தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனித்தனி வீட்டில் சகோதரருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முகமது அப்துல் மனைவி பீரோ லாக்கரை திறந்து, நகைகளை எடுத்த போது, அதில் 52 சவரன் நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. வெளியாட்கள் வீட்டிற்கு வராத நிலையில், லாக்கர் உடைக்காமல் நகைகள் மட்டும் மாயமாகி இருப்பதால், வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தொழிலதிபர் முகமது அப்துல், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்