இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் பலமுறை வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஒன்றிய குழு கூட்டங்களிலும் முத்துரெட்டி கண்டிகை பகுதிக்கு, பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டுமென நீண்ட நாளுக்காக கோரிக்கை வைத்து வந்திருந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தருமாறு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் இடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற எம்எல்ஏ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதற்கான ஆர்டரை திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக 10 நாட்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதிநேர ரேஷன் கடை வருவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மூர்த்தி வரவேற்றார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதாம்ம முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் மாலதிசங்கர், பவித்ரா விஜி, மாலதிபிரகாஷ், கிளைசெயலாளர் சரவணன், சேல்ஸ்மேன் நாகவேல் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜெயமணி, சண்முகம், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏமான டி.ஜெ.கோவிந்தராஜன் பகுதி நேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது முத்துரெட்டிகண்டிகை கிராம மக்கள் எங்கள் பகுதிக்கு ஏற்கனவே புதிய அரசு பேருந்து விடப்பட்டதற்கும், இந்த ரேஷன் கடை திறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.