சென்னை: சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 24 மணி நேரம் குடிநீர் வழங்குவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. திட்ட அறிக்கை தயாரிப்பு பணி முடிந்தவுடன் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.