டெல்லி : முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி; கோடிக்கணக்கானோருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.