சென்னை: திருச்சி மாவட்டம் முசிறி கைலாசநாதர் கோயிலுக்கு இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார். கைலாசநாதர் கோயில் திருப்பணிகள் முடிந்தவுடன் இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.