சென்னை: தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மீது அவரது மனைவி அளித்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனியார் ஓட்டல் உரிமையாளர் சைனி ஜோமன் என்ற பெண்ணுடன் சேர்ந்து தன்னை மிரட்டுவதாகவும், தன்னுடைய 225 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் கணவர் மோசடி செய்ததாகவும் மனைவி புகார் அள்ளித்துள்ளார். மிரட்டல் புகார் தொடர்பாக தனியார் ஓட்டல் உரிமையாளர் சைனி ஜோமனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.