Tuesday, September 17, 2024
Home » முருகனடியார்களின் விருதுகளுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

முருகனடியார்களின் விருதுகளுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

by Karthik Yash

சென்னை: தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் பழனியில் நடைபெறும் மாநாட்டில், முருகனடியார்களான நக்கீரர், போகர், அருணகிரிநாதர் உள்ளிட்ட 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
இந்த விருதுகளை பெறுவதற்கு திருப்பணி, சொற்பொழிவு, இலக்கிய, சமூக, கொடையாளர் மற்றும் அடியார்களுக்கான சேவை புரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் தங்கள் பகுதியிலுள்ள சமய பெரியோர்கள் (ஆதீனங்கள், ஜீயர்கள்) அல்லது திருக்கோயில் செயல் அலுவலரிடம் சான்று பெற்று இணைத்து வரும் 5ம் தேதிக்குள் mmmviruthupalani2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

4 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi