சென்னை: ஆதார் அட்டை பெறுவதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக் கோரி ஐகோர்ட்டில் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். பிரிட்டன் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என்பதால் அடையாள அட்டை வழங்க முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.