தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.