இந்நிலையில் கொலை சம்பவம் நடந்து ஓராண்டான நிலையில், பார்த்திபனின் அண்ணனான நடராஜன், ‘தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில் தம்பி நடத்தி காட்டுவான், துரோகிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்’ என சர்ச்சைக்குரிய வகையில் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது தம்பியின் கொலை தொடர்பாக முகநூலில் மோதல் ஏற்படும் வகையில் பதிவிட்டதாக செங்குன்றம் போலீசார், 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடராஜனை (58) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.