டெல்லி: தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச முரசொலி தஞ்சாவூர் பயணிகள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக அணுகு சாலை அமைப்பது தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களை சந்தித்து மனு அளித்து மக்களின் சார்பில் கோரிக்கை வைத்தார்.