தூத்துக்குடி: முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையர்களால் விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவிட்டுள்ளார். முறப்பநாடு பகுதியில் அலுவலகத்திலேயே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.