முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் தம்பதி சரமாரி தாக்கு

திருத்தணி: முன்விரோதம் காரணமாக தம்பதியை உருட்டு கட்டையால் சரமாரி தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருத்தணி ஒன்றியம், மத்தூர் அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரன். இவரது மனைவி அஸ்வினி (34). இவர் நேற்றுமுன்தினம் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது, மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (22) அந்த வழியாக வந்தார். இவர், முன்விரோதம் காரணமாக அஸ்வினியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அஸ்வினியின் கணவர் சேகரன், எதற்காக என் மனைவியுடன் வீண்தகராறு செய்கிறாய், உடனே இங்கிருந்து சென்றுவிடு என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த உருட்டை கட்டையால் கணவன், மனைவி என இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இருவரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து அஸ்வினி திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீஸ் எஸ்ஐ ராக்கிகுமாரி ரவிச்சந்திரனை கைது செய்தார்.

Related posts

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!