இந்நிலையில் தலோஜா சிறையில் உள்ள உயர்பாதுகாப்பு அறை சிதிலமடைந்து இருப்பதால் அதனை பழுதுபார்ப்பதற்காக அபு சலேமை நாசிக்கில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றுவதற்கு சிறை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றனர். இதை எதிர்த்து அபு சலீம் தாக்கல் செய்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே நேற்று காலை அபு சலீம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலோஜா சிறையில் இருந்து மாற்றப்பட்டார். அவர் வேனில் நாசிக் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.