மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்வுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்ந்து 83,080 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து 25,419 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. பாரத் ஏர்டெல் பங்கு 1.5%, என்.டி.பி.சி., மகிந்திரா மற்றும் மகிந்திரா பங்குகள் தலா 1%, டைட்டன் பங்கு 0.8% விலை உயர்ந்தது.