மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளி உயர்ந்து 81,455 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 459 புள்ளிகள் உயர்ந்து 81,815 புள்ளிகள் உயர்ந்து இறங்கியது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 21,857 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இடைநேர வர்த்தகத்தின் போது நிஃப்டி 136 புள்ளிகள் வரை உயர்ந்துபின் சரிவடைந்தது.