பாஜக எதிர்த்து போராடும் காங்கிரஸ் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ். உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சிகளின் மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி பேச்சுவார்த்தையில் சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. குறிப்பாக மும்பையின் வாந்த்ரே கிழக்கு, காட்கோபர் மேற்கு ஆகிய தொகுதிகளையும் விதர்பாவில் 2 தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தவ்தாக்ரே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாததால் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடம் சரத்பவார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதால் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பினை மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.