மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, தானே, ராய்கட் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது. இதனால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலைகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.