இதற்கிடையே, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜ ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ‘‘முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது?’’ என சர்ச்சையாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தமிழக விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், ‘‘அணை தொடர்பாக கேரள அரசியல் கட்சியினரின் ஆதாரமற்ற பேச்சுக்கள் தொடர்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முல்லை பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 24ம் தேதி தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.