அதிமுகவில் எப்போதோ இருந்த முன்னாள் எம்எல்ஏக்களை தேடி கண்டுபிடித்து, இப்போது கொண்டு போய் பாஜவில் சேர்க்கின்றனர். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால், ஒருபோதும் கட்சி மாறமாட்டார்கள். அண்ணாமலை இப்போது கொண்டு போய் சேர்த்திருக்கிற முன்னாள் எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கூட உரிமை கோருவார்? அந்தளவுக்கு அவர் சென்று விட்டார். ஓபிஎஸ் பாஜவின் அடிமையாக மாறிவிட்டார். சின்னத்தை முடக்குவோம் என பிதற்றி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.