Monday, July 8, 2024
Home » Ms. வாக்காளர்: நவீன வசதி மருத்துவமனை இல்லை

Ms. வாக்காளர்: நவீன வசதி மருத்துவமனை இல்லை

by kannappan

இ.கோமதி,முதலியார்குப்பம் (செய்யூர் தொகுதி) கிராமங்கள் நிறைந்த செய்யூர் தொகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் கடிப்பதால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக செய்யூர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு விஷ ஜந்து கடிகளுக்கு பெரிய அளவில் சிகிச்சை தர எந்த வசதியும் இல்லை. இதனால், செய்யூர் மருத்துவமனை டாக்டர்களே பாதிக்கப்பட்ட நோயாளிகளை செங்கல்பட்டு மருத்துவமனை கொண்டு செல்ல சொல்கின்றனர். ஆனால், இங்கிருந்து செங்கல்பட்டு செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இதனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பலர் உயிரிழந்து விடுகின்றனர். இதே போன்று விபத்துக்கள், மகப்பேறு போன்ற சிகிச்சைகளுக்கு ஸ்கேன் எடுப்பதற்கு எந்த வசதியும் செய்யூர் மருத்துவமனையில் இல்லை. சாதாரண காய்ச்சலுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை உள்ளது. மற்ற சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் அளிக்கப்படுவதில்லை. மகப்பேறு மருத்துவமனைக்கும் தனி வார்டுகள் அமைக்கப்படவில்லை. இதனால், பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு பணம் கொடுத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.  எனவே, நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் சட்டசபையில் இது தொடர்பாக கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளும் அதிமுக அரசு திமுக எம்எல்ஏவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே, செய்யூர் தொகுதி மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட தயாராகி விட்டனர்….

You may also like

Leave a Comment

seven − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi