கரூர்: நில மோசடி விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குவதாக கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அறிவித்துள்ளது.