ம.பி. தலைமை செயலகத்தில் தீ

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் உள்ள அரசு தலைமை செயலகத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து புகை வருவதை பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. மேலும் எந்த ஆவணங்களும் சேதமடையவில்லை.

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது