ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதி எம்.பி.யான என்ஜினியர் ரஷீத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பொறியாளர் ரஷீத் 2019 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ரஷீத், பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவை தோற்கடித்து, திகாரில் இருந்து ஜூலை 5-ஆம் தேதி எம்.பி.யாக பதவியேற்றார்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக என்ஜினியர் ரஷீத் ஜாமீன் கோரியிருந்தார். என்.ஐ.ஏ. நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து திகார் சிறையில் இருந்து ரஷீத் வெளியே வந்தார். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்துக்காக என்ஜினியர் ரஷீத்துக்கு அக்.2 வரை கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.