உஜ்ஜைனி: மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனி மாவட்டத்தில் பிப்லோடா கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பாஜ பிரமுகர் ராம்நிவாஸ் குமாவத். அவரது மனைவி முன்னிபாய். இவர்களது இரண்டு மகன்களும் வெளியூர்களில் இருப்பதாக தெரிகிறது. கணவன், மனைவி மட்டும் கிராமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் கொள்ளையடிப்பதற்காக நுழைந்த மர்மநபர்கள் ராம் நிவாஸ் மற்றும் அவரது மனைவியை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று காலை அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியர் இறந்து கிடந்தனர். மேலும் வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.