இந்நிலையில் திருப்பதியின் இறுதிச்சடங்கு அவரது வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட திருப்பதியின் குடும்பத்திற்கு உதவு வகையில், அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாலை வாங்கி வர வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பணமாக தாருங்கள் என சமூக வலைதளங்களில் அவரது நண்பர்கள் பதிவிட்டனர். இந்த பதிவு வைரலானது. இதனிடையே மொத்தமாக 20 மாலைகளை வாங்கி வந்து துக்க வீட்டில் வைத்திருந்தனர். அதன் அருகே ஒரு சில்வர் பாத்திரமும் வைக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள், நண்பர்கள் ஒரு மாலையை எடுத்துக்கொண்டு, அருகில் வைக்கப்பட்டிருந்த தவலையில் ரூ.100 முதல் ரூ.1000 வரை தங்களால் இயன்றதை போட்டனர். அஞ்சலி செலுத்திய மாலையை மீண்டும் எடுத்து வைத்துக்கொண்டனர். இது குறித்து திருப்பதியின் உறவினர் பிரபு கூறுகையில், ‘இறந்த திருப்பதிக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது இறுதி சடங்கில் மாலைக்கு பதில் ரூ.35,350 ரொக்கம் கிடைத்தது. இந்த தொகை இப்போதைய சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்,’என்றார்.