கேரளாவில் பரபரப்பு; தாய் அடித்து கொலை: தடுத்த தம்பி படுகாயம்; மகன் கைது


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள ஆதூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா குட்டி. இவரது மனைவி நபீசா (62). தம்பதிக்கு நாசர் (42), மஜீத் (35) என்ற 2 மகன்கள் உள்ளனர். நாசர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் நேற்று நபீசாவும், 2 மகன்களும் வீட்டில் இருந்தனர். அப்போது சமையல் அறையில் இருந்த நபீசாவை திடீரென நாசர் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து வந்து சரமாரியாக தாக்கினார். இதில் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி சென்ற மஜீத், நாசரை தடுக்க முயன்றார். அவரையும் நாசர் மண்வெட்டியால் தாக்கினார். பிறகு கத்தி மற்றும் மண்வெட்டியுடன் வெளியே ஓடினார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டினர், நாசரை மடக்கி பிடித்து ஆதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே நபீசாவும், மஜீத்தும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நபீசா பரிதாபமாக இறந்தார். மஜீத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாசரை போலீசார் கைது செய்து காசர்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related posts

தமிழகத்திற்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி