இதையடுத்து மகன் ஷஜியை போனில் பலமுறை போலீசார் தொடர்பு கொண்டபோது தாம் நாய்க்கு சாப்பாடு போட்டு கொண்டிருப்பதால் வரமுடியாது என்ற அவரது பதிலை கேட்ட போலீசாரே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சில மணிநேரத்தில் மூதாட்டி உயிரிழந்த போதும் பிள்ளைகள் வராததால் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், போலீசார் இணைந்து இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பேருந்து நிலையம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னக்குட்டி உடலுக்கு ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது கூட்டத்தோடு கூட்டமாக அவரது மகன் ஷஜி தாயின் உடலை தூரத்தில் இருந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் கேரள வங்கியில் ஊழியராக உள்ளார். மகள் பஞ்சாயத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். நிலம் தொடர்பான பிரச்சனையில் தயை நிர்கதியாக விட்டது தெரியவந்தது. வயதான தாயை பராமரிக்காமல் கைவிட்ட மகன் மீதும், மகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் இருவரது பணியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.