Sunday, June 30, 2024
Home » மாமியாரை கிண்டல் செய்ததால் கூலி தொழிலாளியை வெட்டிய மருமகன்

மாமியாரை கிண்டல் செய்ததால் கூலி தொழிலாளியை வெட்டிய மருமகன்

by Karthik Yash

பெரம்பூர்: திருவிக நகர் 21வது தெரு, மீன் மார்க்கெட் அருகே நடைபாதையில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி மோகன் (24). நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் மோகன் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் மோகனை சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்ப மோகன் திருவிக நகர் காவல் நிலையத்திற்கு ஓடினார். அங்கு ரத்தம் சொட்டிய நிலையில் அவர் மயக்கம் அடைந்தார். போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். திருவிக நகர் போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் மாலை மோகன் குடிபோதையில் மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் தங்கம் என்ற பெண்ணை கிண்டல் செய்ததும்,அவரது மருமகன் பெரம்பூர் கே.சி. கார்டனை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் நண்பர் சேர்ந்து குடிபோதையில் மோகனை வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். வெட்டுப்பட்ட மோகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi