பெரம்பூர்: புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிரேசி (25). தி.நகரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன், தனது மொபட்டை நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை இவரது மொபட் தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். அதன்பேரில், உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். ஆனால், அதற்குள் மொபட் 70 சதவீதம் எரிந்து நாசமானது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் மொபட்டை தீவைத்து எரித்தார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.