இதை தொடர்ந்து சூரிய உதயத்திற்கு பிறகு அவற்றில் இருந்து சூரிய சக்தியை பெற்று ரோவர் மற்றும் லேண்டர் கடந்த 22-ம் தேதி மீண்டும் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி அவற்றில் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் வரவில்லை. இதனால் எதிர்காலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வரும் சாத்தியக்கூறுகள் குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின் மேற்பரப்பு குளிர்ந்த வானிலையை எதிர்கொள்ளும் வகையிலான உபகரணங்கள் அவற்றுக்குள் இடம்பெறாதது இதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.