மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ம் முதல் நேற்று முன்தினம் (ஆக.31) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இடையில் ஓரிரு தினங்கள் மட்டுமே ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.