சென்னை: மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.