கேரளாவில் பருவ மழை தீவிரமடைகிறது: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த ஆண்டு 4 நாள் தாமதமாக கடந்த 8ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தற்போது கேரளாவில் பருவமழை மெதுவாக தீவிரமடைந்து வருகிறது. இன்று கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று பத்தனம்திட்டா ஆலப்புழா எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்