மங்கோலியாவில் கடும் பனிப்புயல் தாக்கத்தால் 70 லட்சம் கால்நடைகள் பலி

உலன்பாட்டர்: ரஷ்யாவுக்கும், சீனா மற்றும் திபெத்துக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் மங்கோலியா அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆண்டுக்கு 10 மாதங்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும். தற்போது இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் மங்கோலியா நாடு முழுவதும் பனியால் உறைந்துள்ளது. விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் பனிப்புயலுக்கு சேதமடைந்தன. இதனால் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் உணவு பொருள் தட்டுப்பாட்டால் 70 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்

காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ