இதனை முன்னதாக பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பும் இந்த விவகாரத்தில் வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை அடிப்படையாக கொண்டு தான் விசாரணை நடத்துவது குறித்து திட்டமிட முடியும் என்று கடந்த மாதம் 7ம் தேதி தெரிவித்திருந்தது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள், வரும் 18ம் தேதி பட்டியலிட்டு வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.