உடையார்: என்னாச்சு, தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் ஜெயிக்காமல் போய் விட்டோமே. வேதனையாக இருக்கிறது. என்ன
சமாச்சாரம். நம்ம ஆட்கள் வேலையே செய்யவில்லை. உள்ளடி வேலை செய்து விட்டார்களா?
தமிழ்ச்செல்வன்: வேலைய ஒழுங்கா செய்யலை என்பது உண்மை.
உடையார்: நயினார் கொடுத்த பணத்தை வீட்டில் கொண்டு போய் வச்சுட்டாங்க.
தமிழ்ச்செல்வன்: அவர் கட்சிக்காரரை பார்த்து கொடுக்கலை. வேண்டிய ஆட்கள், சொந்தக்காரருன்னு ஒரு டீம் போட்டிருந்தனர். அது கொலாப்ஸ் ஆகிடுச்சு. ஏற்கனவே வாங்கியவர்களும் கொடுக்கவில்லை. ஆட்களும் அண்டஸ்டாண்டிங் இல்லை. நாம வருஷம் பூரா வேலை பார்க்கிறோம். கட்சிக்கு வெளியே உள்ள ஆட்கள் இப்போது வந்து சொந்தக்காரர், பந்தக்காரர் என ஒரு பிரச்னை வந்தது.
உடையார் : ஏற்கெனவே இருந்த ஒரு மாவட்ட தலைவர் கட்சியை அழித்தார். அதே நிலைமை இன்று நயினாருக்கு வந்திருக்கு. பெரிய ஆட்கள் எல்லோரும் நலுக்கி விட்டனர். எல்லாரும் 2ம் நம்பர் வேலை பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜவின் நிலைப்பாடு 2ம் நம்பர் வேலை தான். நயினாருடன் இருப்பவங்கள்ளாம் வாங்கி சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர். அதுவும் கட்சிக்காரன்…முதுகில் குத்த விட்டு கொல்வது தான் பெரிய துரோகம்.
கரு நாகராஜன் எங்கே இருந்தார். சரத்குமார் கட்சியில் இருந்தார். அவருக்கு மாநில பொறுப்பு. பாஜவை அழிக்க தமிழகத்தில் முடிவு செய்து விட்டனர். என்ன ஓட்டு வாங்கி இருக்காங்க? மாநில பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகம் என்ன செய்து விட்டார். இந்த கட்சியை வளர்க்க என்ன செய்து விட்டார்.
மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை வளர்ச்சி பிடிக்கலை. அதனால் தமிழகத்தில் பாஜவை அழிக்கின்றனர். தமிழகத்தில் பாஜவை அழித்த நம்பர் 1 கேசவ விநாயகம். கலவரம் செய்தால் தான் பாஜ தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியும். பாஜவிற்கு எந்த நாயும் ஓட்டு போடாது. ஓட்டு போட என்ன செய்து விட்டனர். தமிழ்நாட்டில் பாஜவை கட்ட மண்ணாக்கி விட்டனர். இவ்வாறாக அவர்களின் உரையாடல் முடிகிறது.