சென்னை: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ரூ.1.12 கோடி ஏமாற்றப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த நபர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சாம்நாத், விஜயகுமார், தர்மராஜா ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.