விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பல்வேறு வகைகளில் ரூ.9.75 கோடி பணம் கையாடல் செய்த அதிமுக நிர்வாகி போலீசில் சரணடைந்தார். நகராட்சி ஆணையரின் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகி வினித், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சரண். எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்த அதிமுக நிர்வாகி வினித்திடம் டி.எஸ்.பி. ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.