தற்போது எனக்கு தாயும், தந்தையும் இல்லை. அதிமுக கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு தாயாகவும், தந்தையாகவும் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் 2 அப்பாக்கள் உள்ளனர்’’ என உணர்ச்சி பொங்க பேசினார்.இதை கேட்டு மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசன் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார். பின்னர் சமாளித்து கொண்டு கண்ணீரை துடைத்தார். இதை பார்த்த அதிமுக தொண்டர்கள் ‘அண்ணே இளகின மனசுக்காரர்ப்பா’ என தங்களுக்குள் நெகிழ்ச்சி அடைந்தனர்.