ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்:வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று இரவு ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவை சேர்ந்த 26 வயதான பெண் டாக்டர் ஒருவர் திருவனந்தபுரம் பட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் பணி முடிந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்காக பட்டத்திலிருந்து கேரள அரசு பஸ்சில் ஏறினார். 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். அதே இருக்கையில் இருந்த ஒரு வாலிபர் திடீரென டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டபடியே ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் கூச்சலிட்டதோடு கண்டக்டரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து தம்பானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் மதுரையை சேர்ந்த செல்வா (25) என்பதும், திருவனந்தபுரம் பட்டத்தில் ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின் செல்வாவை போலீசார் கைது செய்து இன்று திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்