வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் மியான்மரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது. ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கர் கிராமங்களில் மட்டும் 41 பேர் பலியாகினர். இந்தப் பகுதியில் ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 81-ஆக உயர்ந்துள்ளது.