செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடி செய்தது `அரசியல் தியானம்’

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் வெளியிடும்போது கும்பகர்ணனை போல தூங்கக் கூடாது. முந்தைய காலத்தில் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் மகான்கள் தியானம் செய்தனர்.

ஆனால் மோடி, 16 கேமராக்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு தியானம் செய்கிறார். இதற்கு பெயர் தேர்தல் அரசியல் தியானம். நடந்து முடிந்த தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

ஜெமினி செயலி!

தமிழக பாஜ தலைவரை கண்டித்து; நங்கநல்லூரில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்; சிஐஎஸ்எப் வீரருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஊழியர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு