மேலும் முக்கிய சாமியார்களை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புரி மடத்தின் சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதிக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தொடர்பாக நேற்று புரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதி கூறும்போது,’ அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலையை பிரதமர் மோடி தொட்டு அதனை பிரதிஷ்டை செய்வார். நான் அங்கு போய் கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா?. நான் அயோத்திக்கு செல்லப்போவதில்லை’ என்று தெரிவித்தார். அவரது பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.