செப்டம்பர் 31ம் தேதிக்குள் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எதையும் சொல்லவில்லை. மாநிலத்தின் முழு அந்தஸ்தை மீட்டெடுப்பது, வேலையில்லா ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி மோடி பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. ஜனநாயகத்தை மீட்டெடுப்பது உள்ளிட்ட மக்கள் விரும்பும் எதைப்பற்றியும் அவர் பேசவில்லை.
இதையெல்லாம் எதிர்பார்த்திருந்த மக்களின் கனவு, நம்பிக்கைகளை மோடி தகர்த்து விட்டார். 370 பிரிவு ரத்தை காங்கிரசும், ஜம்முவில் உள்ள பிராந்திய கட்சிகளும் பயன்படுத்தி கொண்டன என்று மோடி பேசினார். நாங்கள் அதை எப்போது பயன்படுத்தி கொண்டோம். 370 பிரிவு ரத்தை அரசியல் ஆதாயத்துக்காக ஒரு கால்பந்தை போல் பாஜதான் பயன்படுத்தி வருகிறது. அப்படி இல்லையெனில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பேசி மோடி ஏன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.