புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யா போருக்கிடையே பிரதமர் மோடி அடுத்த மாதம் உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. ரஷ்யா 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க கடந்த 8,9 ஆகிய தேதிகளில் ரஷ்யா சென்றார். இத்தகைய சூழலில் பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. அங்கு நீடிக்கும் போர் பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.