டெல்லி: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார். புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். மிக்ஜாம் புயல் நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கிறது.