சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கட், காப்பி, பேஸ்ட் செய்த பட்ஜெட். மற்ற மாநில மக்களின் நலன்களை சமரசம் செய்து, புறந்தள்ளி கூட்டாளிகளின் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு தரும் நிதியை கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை; அம்பானி, அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்,” என்றார்.