Saturday, October 5, 2024
Home » மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

by Mahaprabhu

திருமலை: பிரதமர் மோடியின் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார் என்று ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றம்சாட்டினார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்வது நகைப்புக்குரியது. ஆட்சிக்கு வந்த பிறகு பவன் கல்யாணின் உடை, பேச்சு மாறிவிட்டது. அனைத்து சமூகங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் செயல்பட வேண்டும்.

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் அவர் ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். ஜனசேனா மதச்சார்பற்ற கட்சி என நினைத்தேன். ஆனால் பவன்கல்யாணும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் செல்கிறாரா? மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பவன் கல்யாண் ஏன் பேசவில்லை? மற்ற மதத்தினரும் வாக்களித்ததால் தான் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல்வர் பதவியில் உள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi