“மனு பாக்கர், சரப்ஜோத் சிங்கால் இந்தியாவே மகிழ்ச்சி” : பிரதமர் மோடி

டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம் துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் நாட்டுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர்.இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதால் இந்தியாவே மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாவது பதக்கம் வென்ற மனு பாக்கர் நிலையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு